நாடக ஆசிரியர்
இந்நாடகத்தினை எழுதிய பிரளயன், தமிழ் நாட்டில் ‘திறந்த வெளி அரசியல் அரங்கை’ பரவலாக்கியதில் முதன்மை வகிக்கும் சென்னை கலைக்குழுவின் நிறுவனரும் அமைப்பாளருமாவார்.. அனைத்திந்திய அளவில் அறியப்பட்ட நாடக ஆளுமையான இவர்,இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட திறந்தவெளி அரசியல் நாடகங்களையும் ஏழு முழு நீள நாடகங்களையும் எழுதி நெறியாள்கை செய்துள்ளார்.இவரது உருவாக்கங்களில் ‘மாநகர்’ , ‘ஜேம்ஸ் பாண்ட்’, ‘பயணம்’, ‘பவுன்குஞ்சு’, ‘இடம்’
‘உபகதை’,
‘பாரி படுகளம்’ போன்ற நாடகங்கள் குறிப்பிடத்தகுந்தவை ; அனைத்திந்திய அளவில் பரவலாக அறியப்பட்டவை.
2010 ம் ஆண்டு,மே மாதம், நார்வேயின் தலை நகர் ஆஸ்லோவிலுள்ள ,
‘ஆஸ்லோ
இசைக்கல்லூரி’ யின் அழைப்பின் பேரில் நார்வே சென்று ஒரு மாதகாலம் தங்கி, அங்குள்ள பலமொழி பேசக்கூடிய நாடக மற்றும் இசைக்கல்லூரி மாணவர்களைக்கொண்டு தமிழில் ஓர் இசை நாடத்தை தயாரித்து நெறியாள்கை செய்துமுள்ளார்.
1998ம் ஆண்டு முதல், கர்நாடகாவிலும்,தமிழ்நாட்டிலும் டிவிஎஸ் எஜுகேஷனல் சொசைட்டியினரின் கீழியங்கும்
பள்ளிகளில் இவர்
மேற்கொண்டு வரும் கல்வியில் நாடகச்[theatre-in-education] செயல்பாடுகள் மற்றும் நாடகத்தயாரிப்புகள் கவனிப்புக்குரியவை.
ஊடகம் மற்றும் திரைப்படத்துறையிலும் பணியாற்றி வரும் இவரது அண்மைப்படைப்பே ‘வஞ்சியர் காண்டம்’ எனும் இந்நாடகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக