vancheyar kandem
வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013
நாடக ஆசிரியரைப் பற்றி...
நாடக ஆசிரியர்
இந்நாடகத்தினை எழுதிய பிரளயன், தமிழ் நாட்டில் ‘திறந்த வெளி அரசியல் அரங்கை’ பரவலாக்கியதில் முதன்மை வகிக்கும் சென்னை கலைக்குழுவின் நிறுவனரும் அமைப்பாளருமாவார்.. அனைத்திந்திய அளவில் அறியப்பட்ட நாடக ஆளுமையான இவர்,இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட திறந்தவெளி அரசியல் நாடகங்களையும் ஏழு முழு நீள நாடகங்களையும் எழுதி நெறியாள்கை செய்துள்ளார்.இவரது உருவாக்கங்களில் ‘மாநகர்’ , ‘ஜேம்ஸ் பாண்ட்’, ‘பயணம்’, ‘பவுன்குஞ்சு’, ‘இடம்’
‘உபகதை’,
‘பாரி படுகளம்’ போன்ற நாடகங்கள் குறிப்பிடத்தகுந்தவை ; அனைத்திந்திய அளவில் பரவலாக அறியப்பட்டவை.
2010 ம் ஆண்டு,மே மாதம், நார்வேயின் தலை நகர் ஆஸ்லோவிலுள்ள ,
‘ஆஸ்லோ
இசைக்கல்லூரி’ யின் அழைப்பின் பேரில் நார்வே சென்று ஒரு மாதகாலம் தங்கி, அங்குள்ள பலமொழி பேசக்கூடிய நாடக மற்றும் இசைக்கல்லூரி மாணவர்களைக்கொண்டு தமிழில் ஓர் இசை நாடத்தை தயாரித்து நெறியாள்கை செய்துமுள்ளார்.
1998ம் ஆண்டு முதல், கர்நாடகாவிலும்,தமிழ்நாட்டிலும் டிவிஎஸ் எஜுகேஷனல் சொசைட்டியினரின் கீழியங்கும்
பள்ளிகளில் இவர்
மேற்கொண்டு வரும் கல்வியில் நாடகச்[theatre-in-education] செயல்பாடுகள் மற்றும் நாடகத்தயாரிப்புகள் கவனிப்புக்குரியவை.
ஊடகம் மற்றும் திரைப்படத்துறையிலும் பணியாற்றி வரும் இவரது அண்மைப்படைப்பே ‘வஞ்சியர் காண்டம்’ எனும் இந்நாடகம்.
நாடகக் கலைப்பயணம்
தேசிய
நாடகப்பள்ளி,மண்டல
ஆதாரமையம்,பெங்களூரு
மற்றும்
தென்னக
பண்பாட்டு மையம்,தஞ்சாவூர்
இணைந்து நடத்திய
ஒருமாதகால
உண்டு உறைவிட
நாடகப்பயிலரங்க பங்கேற்பாளர்கள் வழங்கும்
‘வஞ்சியர்
காண்டம்’
பிரளயனின் ‘வஞ்சியர் காண்டம்’
நெறியாக்கம் பேரா.ராஜூ
நாடகக்கலைப்பயணம்
பிப்ரவரி 11முதல் பிப்-20 வரை
தேசிய
நாடகப்பள்ளி மண்டல ஆதாரமையம்,பெங்களூரு
மற்றும்
தென்னகப்
பண்பாட்டு மையம்,தஞ்சாவூர்
ஆகியவற்றின்
ஆதரவு பெற்றது.
A Theatre on
Tour
“Vanchiyar
kaandam”
A tamil play
Written by
Pralayan
Directed
by.Prof.R.Raju
From Feb 11
to Feb 20.
Supported by
National
School of Drama,Regional Resource Centre,Bengaluru
South Zone Cultural Centre,Tanjore.
நாள்
|
ஊரும் இடமும்
|
நாடகத்தை நடத்துவோர்
|
11-02-2013 திங்கள்
மாலை 7மணி
|
பெத்தி செமினார் பள்ளி அரங்கம்,காந்தி ரோடு,
புதுச்சேரி
|
முற்போக்கு
எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்,
புதுச்சேரி
|
12-02-2013 செவ்வாய்
மாலை 7 மணி
|
பாலாமந்திர் ஜெர்மன் ஹால்,17,பிரகாசம் சாலை,(நடிகர் சங்கம் அருகில்)தி.நகர்,சென்னை-17
|
பொதுப்பள்ளிக்கான
மாநில மேடை,
சென்னை-17
|
13-02-2013 புதன்
மாலை 7 மணி
|
டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளி,திறந்த
வெளி அரங்கம்,
திருவண்ணாமலை
|
டயலாக், சமூக கலை இலக்கியத்திற்கான ஒரு மையம்.
திருவண்ணாமலை-1
|
14-02-2013 வியாழன்
மாலை 7 மணி
|
பாரத மிகுமின் நிறுவன
ஊரக அரங்கம்,
ராணிப்பேட்டை
|
முத்தமிழ் மன்றம்,
பாரத மிகுமின் நிறுவன ஊரகம்,
ராணிப்பேட்டை-
632 406
|
15-02-2013 வெள்ளி
மாலை 7 மணி
|
தூய நெஞ்சுக்கல்லூரி
வளாகம்,
திருப்பத்தூர்.
|
மாற்று நாடக இயக்கம்
திருப்பத்தூர்.
|
16-02-2013 சனி
மாலை 7 மணி
|
குருநானக் பவன்,
வசந்த் நகர்,பெங்களூரு
|
‘ஆரங்கள்’ மற்றும்
‘வாழை’ அமைப்புகள்
கோரமங்களா,
பெங்களூரு.
|
17-02-2013 ஞாயிறு
மாலை 7 மணி
|
அத்வைத் இண்டர்நேஷனல் அகாதமி வளாகம்,
ஆவலப்பள்ளி,ஹட்கோ
ஓசூர்.
|
தமிழ்நாடு முற்போக்கு
எழுத்தாளர்கள்,கலைஞர்கள்
சங்கம்,
ஓசூர்.
|
18-02-2013 திங்கள்
|
பெருமாள் மணிமேகலை
பொறியியல் கல்லூரி
வளாக உள்ளரங்கம்.
|
பெருமாள் மணிமேகலை பொறியியல் கல்லூரி,
ஓசூர்.
|
19-02-2013 செவ்வாய்
மாலை 7 மணி
|
சி.எஸ்.ஐ பள்ளி மைதானம்,
ப்ரூச் ரோடு,
ஈரோடு.
|
தமிழ்நாடு முற்போக்கு
எழுத்தாளர்கள்,கலைஞர்கள்
சங்கம்,
ஈரோடு மாவட்டம்.
|
20-02-2013 புதன்
மாலை 7 மணி
|
கலைக்காவிரி கல்லூரி
உள்ளரங்கம்,
திருச்சி.
|
’களம்’ அமைப்பு
திருச்சி.
|
தமிழ் நாடகம்
இளங்கோவடிகள்
எழுதிய சிலப்பதிகாரத்தின் இறுதிப்பகுதியான வஞ்சிக்காண்டத்தில் சொல்லப்படும் ஒரு காட்சியிலிருந்து இந்நாடகம் தொடங்குகிறது.
சேரன் செங்குட்டுவன் குடவாயில் கோட்டத்தில் கண்ணகிக்கு கோயில் கட்டி விழா எடுக்கிறான். அவ்விழாவில் கலந்துகொண்டு திரும்புகிற கண்ணகியின் செவிலித்தாய் காவற்பெண்டு,கண்ணகியின் தோழி தேவந்தி, கண்ணகிக்கு மதுரையில் அடைக்கலம் அளித்த ஆயர்சேரியின் தலைமகள் மாதரியின் மகள் ஐயை
ஆகியோர் தாங்கள் தம் வாழ்வில் கண்ட நிஜக்கண்ணகியை நினைவு கூர்கின்றனர்.
தெய்வக்கோலம் கொண்ட கண்ணகிக்கும், இவ்வஞ்சியரது வாழ்வனுபவத்தில் தோற்றமளித்த கண்ணகிக்கும் இடையே உள்ள முரணே இங்கு ‘வஞ்சியர் காண்டம்’ எனும் நாடகமாக விரிகிறது.
நாடக
ஆசிரியர் : இந்நாடகத்தினை எழுதிய பிரளயன், தமிழ் நாட்டில் ‘திறந்த வெளி அரசியல் அரங்கை’ பரவலாக்கியதில் முதன்மை வகிக்கும் சென்னை கலைக்குழுவின் நிறுவனரும் அமைப்பாளருமாவார்.. அனைத்திந்திய அளவில் அறியப்பட்ட நாடக ஆளுமையான இவர்,இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட திறந்தவெளி அரசியல் நாடகங்களையும் ஏழு முழு நீள நாடகங்களையும் எழுதி நெறியாள்கை செய்துள்ளார்.இவரது உருவாக்கங்களில் ‘மாநகர்’ , ‘ஜேம்ஸ் பாண்ட்’, ‘பயணம்’, ‘பவுன்குஞ்சு’, ‘இடம்’
‘உபகதை’,
‘பாரி படுகளம்’ போன்ற நாடகங்கள் குறிப்பிடத்தகுந்தவை ; அனைத்திந்திய அளவில் பரவலாக அறியப்பட்டவை.
2010 ம் ஆண்டு,மே மாதம், நார்வேயின் தலை நகர் ஆஸ்லோவிலுள்ள ,
‘ஆஸ்லோ
இசைக்கல்லூரி’ யின் அழைப்பின் பேரில் நார்வே சென்று ஒரு மாதகாலம் தங்கி, அங்குள்ள பலமொழி பேசக்கூடிய நாடக மற்றும் இசைக்கல்லூரி மாணவர்களைக்கொண்டு தமிழில் ஓர் இசை நாடத்தை தயாரித்து நெறியாள்கை செய்துமுள்ளார்.
1998ம் ஆண்டு முதல், கர்நாடகாவிலும்,தமிழ்நாட்டிலும் டிவிஎஸ் எஜுகேஷனல் சொசைட்டியினரின் கீழியங்கும்
பள்ளிகளில் இவர்
மேற்கொண்டு வரும் கல்வியில் நாடகச்[theatre-in-education] செயல்பாடுகள் மற்றும் நாடகத்தயாரிப்புகள் கவனிப்புக்குரியவை.
ஊடகம் மற்றும் திரைப்படத்துறையிலும் பணியாற்றி வரும் இவரது அண்மைப்படைப்பே ‘வஞ்சியர் காண்டம்’ எனும் இந்நாடகம்.
நாடக
நெறியாளுனர் : இந்நாடகத்தை நெறியாள்கை செய்துள்ள பேராசிரியர்.ராஜூ, தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் நவீன நாடக இயக்கத்தை முன்னெடுத்த முன்னோடிகளில் ஒருவர். இவரது நெறியாக்கத்தில் மேடையேற்றப்பட்ட இந்திரா பார்த்த சாரதியின், ‘நந்தன் கதை’ , ‘ஔரங்கசீப்’,
‘கொங்கைத்தீ’
ஆகிய நாடகங்கள் அனைத்திந்திய அளவில் பரவலாகப் பேசப்பட்டவை.
1984 ம்
ஆண்டு முதல் 1996 வரை
மைய அரசின் சங்கீத நாடக அகாடமி, இளம் நெறியாளுனர்களை ஊக்குவிக்க நூற்றுக்கு மேற்பட்ட நாடகங்களை நிதியுதவியளித்து தயாரிக்க உதவியது. இப்படி 20 ஆண்டுகளாக தயாரிக்கப்பட்ட சில நூறு நாடகங்களில் தேசிய அளவில் சிறந்த முதல் பத்து நாடகங்களிலொன்றாக அடையாளம் காணப்பட்டது இவர் மேடையேற்றிய ‘நந்தன் கதை’.
1970 களின் இறுதியில் தேசிய நாடகப்பள்ளியில் பயின்று முடித்த இவர், அனைத்திந்திய அளவில் நடைபெறும் நாடகப்பயிலரங்குகளின் விரும்பப் படும் திறனாளராக இன்றும் இருந்துகொண்டிருக்கிறார். பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகத்து நிகழ்கலைத்துறையின் புல முதன்மையர்,துறைத்தலைவர்
பொறுப்புகளை வகித்து தற்போது பேராசிரியராகப்பணியாற்றுமிவர், ஏற்கனவே சிலப்பதிகாரத்தை அடிப்படையாய்க் கொண்ட இந்திரா பார்த்தசாரதியின் கொங்கைத்தீ, எச்.எஸ்.சிவப்பிரகாஷின் மதுரைக்காண்டம் ஆகிய நாடகங்களை நெறியாள்கை செய்துள்ளார். அவ்வரிசையில் ‘வஞ்சியர் காண்டம்’ இவரது மூன்றாவது தயாரிப்பாகும்.
திரைப்படங்கள், மற்றும் தொலைக்காட்சித்
தொடர்களில் பங்கெடுக்கும் இவர், 1980களில் தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்காக குறும்படங்களை மற்றும் ஆவணப்படங்களை தயாரித்து இயக்கியுமுள்ளார்.
மேடையில்
க.பிரியங்கா - கண்ணகி
சே.அஜிதா - காவற்பெண்டு
ம.வித்யா -
தேவந்தி
ஆ.ரூபா –
ஐயை
சு.நந்தினி –
மாதரி
த.மகேஸ்வரி – கண்ணகியின் தாய்
மதியழகன் - மாநாய்கன்
ச.மணிகண்டன் - கோவலன்
சீ.சாரதிகிருஷ்ணன்- கூத்தன்
மா.மோகன்- உவச்சன்
பிரகதீஸ்வரன் - பூசகன்
பின்
மேடை
காட்சி அமைப்பு:- எஸ்.பி.சீனிவாசன்
உதவியாளர்கள்
:-
தினேஷ், ம.ஜெகன், ச.பெலிக்ஸ், நடராஜன், ச.மணிகண்டன், மதியழகன்
ஒளி
அமைப்பு :- சைமன்.P.M
உதவியாளர்கள் :
எஸ்.சுதன், பி.ஆனந்தகுமார், என்.அருணாச்சலம், ர.அறிவழகன்,
இசைக்கரு:- பிரளயன்
இசை:- சமணராஜா
ரிதம்
பேடு - T.ரமேஷ்
புல்லாங்குழல்
- J.கில்பெர்ட்
மிருதங்கம் - R.செந்தில்குமார்
தவில்
- ரங்கராஜன்
உதவியாளர்கள்:-
S.புஷ்கலம், செண்பகம் @ திவ்யா, R.வைஷ்ணவி, S.ரேகா, K.பிரகதீஸ்வரன்
S.சாரதிகிருஷ்ணன், மோகன்.M, விவேகானந்தராஜா, A.அமுல்ராஜ்
M.S.மதியழகன்
ஒப்பனை:- அடபாலா
உதவியாளர்கள்
:-
A.குமார், K.மார்த்தாண்டம், A.ரூபா, K.பிரியங்கா, X.அஜிதா
உடையலங்காரம்:- எஸ்.பி.சீனிவாசன் - சென்னகேசவ்
உதவியாளர்கள்:- A.ஜெயசரவணன், M.வித்யா, T.மகேஸ்வரி, K.தங்கராஜ், S.நந்தினி
மக்கள்
தகவல்
தொடர்பு:-
இரா.விஜயகுமார்
உதவியாளர்கள்:-
S.சுபாஷ் சந்திர போஸ், C.மணிகண்டன்
மேடை நிர்வாகம்:-V.அசோக் சிங், T.வடிவேல்
உதவியாளர்கள்:-
R.விஜயகுமார், S.சுபாஷ் சந்திர போஸ்
ஆட்டக்கலை
பேரா.K.முருகேசன், கலைமாமணி தேன்மொழி, ராஜேந்திரன், ரங்கராஜன்
குழு மேலாளர் : பேரா. K.ரவீந்திரன்.
நாடகாசிரியர்:- பிரளயன்
நாடக இயக்குநர்
– பேரா. இரா.ராசு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)